> பாகற்காய் சாறு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? மற்ற நன்மைகள் என்னென்ன?

பாகற்காய் சாறு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? மற்ற நன்மைகள் என்னென்ன?

 பாகற்காய் சாறு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? மற்ற நன்மைகள் என்னென்ன?

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பாகற்காய் சாறு குடிப்பது சிறந்ததா? பாகற்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.


சர்க்கரை நோய் என்பது உடலின் பெரும்பாலான உறுப்புகளின் செயல்பாடுகளைப் பாதிக்கும் ஒரு தீவிரமான நிலை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 830 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு மட்டும் 3.4 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் உயிரிழந்துள்ளனர். இதற்கு, மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றது.

வாழ்க்கை முறை மாற்றங்கள் இளைஞர்கள் மத்தியிலும் நீரிழிவு நோயை அதிகரிக்கச் செய்கின்றன. இருப்பினும், ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு நோயை ஓரளவு தடுக்கலாம். அதற்கு, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளை உணவில் சேர்ப்பது அவசியம். அதில் முக்கியமான ஒரு காய்கறி தான் பாகற்காய்.
பல நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பாகற்காய் சாறு குடிக்கிறார்கள். ஆனால் இதன் முழு நன்மைகளைப் பெற பாகற்காய் சாறு எப்போது குடிக்க வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது. நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட பாகற்காய் சாறு எப்போது குடிக்க வேண்டும் மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துமா?

பாகற்காய் சாறு இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதிலும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதிலும் நன்மை பயக்கும். பாகற்காயில் பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. பாகற்காய் சாற்றில் உள்ள சரன்டின் மற்றும் பாலிபெப்டைட்-பி கலவைகள் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுவதாக NCBI இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தையும் கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதலையும் மெதுவாக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.

எப்போது குடிப்பது சிறந்தது?

பாகற்காய் சாறு தொடர்ந்து குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். இதன் ஒட்டுமொத்த நன்மைகளை பெற, காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கவும் உதவும்.
பாகற்காய் சாற்றின் பிற நன்மைகள்:

பாகற்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் திறன் கொண்டது. இது கொழுப்பைக் குறைக்கவும் உதவும். இவை அனைத்தும் எடை இழப்புக்கு நன்மை பயக்கும்.
பாகற்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருட்களின் வளமான மூலமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் மெதுவாக்கும்.
பாகற்காயில் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது முகப்பருவைப் போக்கவும், சரும நிறமாற்றத்தைக் குறைக்கவும், இயற்கையான பொலிவை அதிகரிக்கவும் உதவும். சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் இது பயனுள்ளதாக இருக்கும்.
கல்லீரலில் இருந்து நச்சுகளை அகற்றுவதிலும், கல்லீரல் நொதிகளை ஒழுங்குபடுத்துவதிலும் பாகற்காய் சாறு நன்மை பயக்கும். இது கல்லீரலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் ஆதரிக்கிறது.
பாகற்காய் நார்ச்சத்தில் நல்ல மூலமாகும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. பாகற்காய் சாறு குடிப்பது அஜீரணம், வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும். மலச்சிக்கலைப் போக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
பப்பாளியில் அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஆண்டிஹிஸ்டமைன் பண்புகள் உள்ளன. இது ஆஸ்துமா, சளி, வைரஸ் தொற்றுகள் போன்ற சுவாசப் பிரச்சினைகளைப் போக்க உதவும். சர்க்கரை அளவை குறைக்க பாகற்காய் சாறு குடிப்பவர்கள் கட்டாயம் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.